×

இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை

பெங்களூரு: இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர் செய்த விவகாரத்தில் அண்ணன், தம்பி சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் காரிமணி கிராமத்தை சேர்ந்தவர் சோமப்பா மகன் மாயப்பா கலேகொடி (22). அதே பகுதியில் துன்டனகொப்பா கிராமத்தில் வசித்து வருபவர் பகீரப்பா பாம்விகாலா (50). கூலி தொழிலாளி. இவருக்கு அர்னா (பெயர் மாற்றம்) என்ற மகள் உள்ளார். இவரை ஒரு தலைபட்சமாக மாயப்பா காதலித்து வந்துள்ளார். அர்னா எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்துள்ளார்.

மேலும் தன்னை காதலிக்கும்படி டார்ச்சர் செய்துள்ளார். இதுபற்றி தந்தையிடம் அர்னா கூறியுள்ளார். உடனே நேற்று மாயப்பா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ‘எனது மகளின் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு’ என்று பகீரப்பா எச்சரித்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பகீரப்பா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாயப்பாவை சரமாரியாக குத்தியுள்ளார். ரத்தம் பீறிட்டு அலறி துடித்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாயப்பாவின் சகோதரர் யல்லப்பா கலேகொடி ஓடி வந்தார்.

அவரையும் பகீரப்பா கத்தியால் குத்தினார். இதில் அண்ணன், தம்பி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். பகீரப்பா, தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தை பார்த்ததும் பொதுமக்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து பாம்விகாலா போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததால் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. தலைமறைவான பகீரப்பாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Somappa ,Mayappa Kalekodi ,Garimani ,Belagavi district, Karnataka ,Dundanagoppa ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்